கொழும்பு – தெஹிவளையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைவந்த இரு இளைஞர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணான்டோவின் பணிப்பரைக்கமைய ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 500 மி.கீ. போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான இருவரும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்