ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் வாய்ப்பு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. அத்துடன், தேசியப்பட்டியல் வேட்பாளர் ஜோன் அமரதுங்கவின் பெயரும் அடிபடுகின்றது.
ஐ.தே.கவின் விசேட கூட்டமொன்று இன்று முற்பகல் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.