ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று; (02) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படலாம் என தெரியவருகின்றது.
பாலித ரங்கே பண்டாரவுக்கு பதிலாக கட்சியின் பொதுச்செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.