ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை பொருத்தமான நபரொருவருக்கு வழங்குமாறுகோரி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நவீன் திஸாநாயக்க இன்று (26) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் நவீன் திஸாநாயக்கவை நீடிக்க வைப்பதற்கு கட்சியின் மத்தியசெயற்குழு அண்மையில் முடிவெடுத்திருந்தது. இந்நிலையிலேயே நவீன் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கட்சி உறுப்புரிமை மற்றும் செயற்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்த்து தனக்கு போதும் எனவும், பிற பதவிகள் அவசியமில்லை எனவும் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.