இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தப்பியோடியுள்ள பாதாள குழு தலைவர் ‘கஞ்சிபான’ இம்ரான் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியோடும் திட்டத்துடனேயே அவர், தமிழகம் சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்தில் புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான், டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட அவர், இலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. டிசம்பர் 25 ஆம் திகதி அவர் தமிழகத்துக்கு தப்பியோடிவிட்டார் என தகவல் வெளியானது.










