பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது. கடந்த 24 மணிநேரத்துக்குள் மேலும் 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மஹியங்கன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 89 பேருக்கும், எல்ல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும், பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேருக்கும், ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 10 இற்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.










