‘கணவன் எனக்கூறி கள்ள காதலனை கொரோனா முகாமில் தங்க வைத்த பெண் பொலிஸ் அதிகாரி’

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஏற்கனவே திருமணம் ஆன நபரை தன் கணவர் என கூறி கொரோனா தடுப்பு மையத்தில் தன்னுடன் தங்க வைத்து நாடகம் ஆடி உள்ளார்.

இந்தியாவின், மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து காவல்துறையினரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சில பொலிஸ் அதிகாரிகள் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அப்படி தனிமைப்படுத்தப்படும்போது அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் தபால் துறையில் வேலை பார்த்து வந்த ஒருவரை அழைத்து வந்து கொரோனா தடுப்பு முகாமில் பெண்  தனிமைப்படுத்தினர்.

இதற்கிடையில், பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் தனது கணவருக்கு கொரோனா உள்ளது என கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்து சென்று உள்ளனர். ஆனால், அவர் பெண் பொலிஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை மீட்டுத்தரவேண்டும் எனவும்  மனு கொண்டுத்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரிக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவருடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த ஆண்டு நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியின் போது பெண் பொலிசுக்கும், அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர் அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

தனது கணவர் பெண் பொலிசுடன், தனியாக குடும்பம் நடத்தி வந்தது அந்த நபரின் மனைவிக்கு தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.

இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தையடுத்து பெண் பொலிஸ் அதிகாரியும், அவரது ரகசிய காதலனும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles