கண்காட்சியை பார்வையிட்ட ஜீவன் – கலைஞர்களின் கோரிக்கையையும் ஏற்றார்

மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்பட கண்காட்சி  இன்று 23 ஆம் திகதி தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

மலையக மக்களின் மண் வாசனை தரும் இது போன்ற செயற்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், கண்காட்சியை  ஏற்பாடு செய்த குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அத்தோடு கண்காட்சியில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் தங்களுடைய திறமையை விருத்தி செய்ய புகைப்படக் கருவி ஒன்றினை வழங்குமாறு அமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர், அவர்களுடைய கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கான புகைப்பட கருவியை பெற்றுத்தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles