கண்டி, ஹந்தான மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றில் உயர் கல்வி பயிலும் 27, 28, 29 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
க. யோகா