கண்டியில் 45 பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் பூட்டு!

கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 பாடசாலைகளை கடந்த 26ஆம் திகதி முதல் இன்று வரைமூடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே மேலும் ஒரு வாரகாலம் விடுமுலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அக்குறணை பகுதியிலும் 5 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

 .

Related Articles

Latest Articles