கண்டி மாவட்டத்தில் மலர்கிறது புதிய தமிழக்கட்சி – முக்கிய புள்ளிகள் இணைவு!

கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது எனவும், இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரே இதன் பின்னணியில் செயற்படுவதாகவும், முக்கியமான சிவில் அமைப்புகள் இக்கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட சில வேட்பாளர்களும் இக்கட்சியில் இணைந்து பயணிக்க தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கண்டி மாவட்டத்தை பிரதான தளமாக இயங்குவதற்கு திட்டமிட்டுள்ள அக்கட்சி, மாத்தளையிலும் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கும் என முக்கிய பிரமுகர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் தகவல் வெளியிட்டார்.

Related Articles

Latest Articles