அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது.
இதன் வழியே, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் மீது வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அந்த கப்பல் நேற்று அதிகாலை திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன.
இந்த சம்பவத்தில், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து கொண்டது. பின்னர் அது நீரில் மூழ்கியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்பு பணி மேற்கொள்ள சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். வாகனங்கள் நீரில் விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர்.
பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் நீரில் விழுந்தனர்.இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன.
போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து கழகம் தெரிவித்தது.தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இதுபற்றி மேரிலேண்ட் பொலிஸார் இன்று கூறும்போது, பால விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 6 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறினர்.