கம்பளையில் ஆட்டோ சாரதிகள் பகல் கொள்ளை! கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!!

எரிபொருள் விலையேற்றத்தையடுத்து நாட்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கிலோ மீற்றருக்கு 80 ரூபாவும், அடுத்த கிலோமீற்றருக்கு 50 ரூபாவும் அறிவிடுமாறு ஆட்டோ ஓட்டுநர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் கம்பளை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஆட்டோ கட்டணத்தை ஆரம்ப ஆட்டோ கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர்.

கம்பளை நகரிலிருந்து, கம்பளை வைத்தியசாலைக்கு செல்வதற்கு 80 ரூபா அறிவிடப்பட்டுவந்த நிலையில், தற்போது 150 ரூபா அறிவிடப்படுகின்றது. 500 மீற்றர் பயணம் செய்தால்கூட அந்த தொகையையே வழங்க வேண்டியுள்ளது. 150 ரூபா கட்டணமாக இருந்த பகுதிகளுக்கு தற்போது 300 ரூபா அறிவிடப்படுகின்றது என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏன் இவ்வளவு கட்டணம் அதிகரித்துள்ளது என கேட்டால், பயணிகளுடன் ஆட்டோ சாரதிகள் முரண்படும் நிலைமையும் காணப்படுகின்றது.

அதேவேளை, கம்பளை நகரில் சேவையில் ஈடுபடும் ஆட்டோக்களுக்கு இன்னும் ‘மீட்டர்’கூட பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Related Articles

Latest Articles