கம்பளையில் 200 இற்கும் மேற்பட்டோருக்கு பிசிஆர் பரிசோதனை

கம்பளை நகரில் 200 இற்கும் மேற்பட்டோரிடம் இன்று (30) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள், சுகாதார தரப்பினரால் பெறப்பட்டன.

கம்பளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கம்பளை நகரிலுள்ள 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி பிஸ்கடர் நிறுவனத்தின் முகவருடன் நெருக்கமாக பழகியவர்களே இன்று இவ்வாறு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

Related Articles

Latest Articles