கம்பளை, தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மில்லகாமுல – கோணட்டுவல கிராமம் இன்று (20.10.2020) தனிமைப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சுகாதார அதிகாரிகளால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் 425 குடும்பங்கள் வாழ்கின்றன, இதில் 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மில்லகாமுல – கோணட்டுவல கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து எவரும் வெளிப்பகுதிக்கு செல்வதற்கும், வெளியில் இருப்பவர்கள் அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, வெயாங்கொட பகுதியிலுள்ள விகாரையொன்றில் தொழில்செய்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி இருவர் மேற்படி கிராமத்திலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.
இவ்விருவரிடமும் கடந்த 16 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. வைரஸ் தொற்று உறுதியானது, இதனையடுத்து அவர் மாத்தளை, லக்கல பல்லேகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக குருவியின் சிறப்புச் செய்தியாளர்