கம்பளை பொலிஸ் விடுதிமீது முறிந்து விழுந்தது பலாமரம்!

கம்பளை, பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதிமீது இன்று அதிகாலை பாரிய பலா மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் பொலிஸ் விடுதியின் கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன், பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், தெய்வாதீனமாக எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கம்பளை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே விடுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை நிருபர் – லாவண்யா

Related Articles

Latest Articles