‘கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு தொழிலாளர் தேசிய சங்கம் முழு ஆதரவு

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு தொழிலாளர் தேசிய சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் பணிப்பில் சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு,

“இலங்கையில் சுமார் 250ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொழிலாளர் தேசிய சங்கம் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறது. இந்த தாக்குதலில் மலையகத்தைச் சேர்ந்த உறவுகளும் பலியாகினர். தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முழுமையாக ஈடுசெய்யப்படவில்லை.

விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என பல தரப்பினரும் அறிவித்துள்ளனர். எமது நிலைப்பாடும் அதுவே. இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள கருப்பு ஞாயிறு அறிவிப்பை நியாயமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தொழிலாளர் தேசிய சங்கம் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்.”   – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles