கற்பாறை புரளுதல் – மண்மேடு சரிதல்; இரு பகுதிகளில் 106 சம்பவங்கள் பதிவு

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாத்தளை மாவட்டத்தில், உக்குவளை மற்றும் இறத்தோட்டை ஆகிய இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள 106 இடங்களில் கற்பாறைகள் புரண்டு விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்த அனர்த்தங்களால் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக மாத்தளை தேசிய கட்டட ஆய்வு மையத்தின் பிரதான அதிகாரி என்.டப்ளிவ்.என்.சீ.யூ.பீ.மொறேமட தெரிவித்தார்.

 

மிகவும் அவதானம் மிக்க இடங்கள் பலவற்றிலிருந்து 29 குடும்பங்களை உடனடியாக அகற்றுவதற்கு குறித்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளர்களை அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை மற்றும் உக்குவளை வலயங்களுக்கு விடுத்திருந்த சிகப்பு எச்சரிக்கை மேலும் நீடிப்பதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles