இலங்கை அரசியலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பேர்போன விமல்வீரவன்ச, இன்று சத்தியாகிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு முன்னால் கட்சி சகாக்களுடன் திரண்டு வந்து அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விமலும், அவரின் சகாக்களும் தெரிவித்துள்ளனர்.
கல்வி மறுசீரமைப்பை உடன் கைவிடு, கோ ஹோம் ஹரிணி என்று கோஷங்கள் எழுப்படுகின்றன.










