காசாவில் பட்டினி சாவு அதிகரிப்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு வார சிசு உட்பட 15 பேர் பட்டினியால் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கும் நிலையில் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் முன் னெப்போதும் இல்லாத வகையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

காசா போரில் இதுவரை பட்டினியால் குறைந்தது 101 பேர் மரணித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 80 வீதமானவர்கள் சிறுவர்கள் என்பதோடு அவர்களிலும் பெரும்பாலானவர்கள் அண்மைய வாரங்களிலேயே உயிரிழந்துள்ளனர்.

காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் கட்டுப்படுத்துவதோடு, அங்குள்ள அதிகப் பெரும்பான்மையான மக்கள் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பத்தியில் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கே அடிப்படைத் தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பட்டினி மற்றும் களைப்புக் காரணமாக மருத்துவர்கள், தன்னார்வ பணியாளர்கள் அதேபோன்று தமது ஊழியர்களும் வேலைக்கு மத்தியில் மயங்கி விழுவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

‘யாரும் தப்பவில்லை: காசாவில் உள்ள தொண்டுப் பணியாளர்கள் கூட பராமரிப்பை எதிர்கொண்டுள்ளனர். மருத்துவர்கள், தாதியர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவியாளர்களும் பட்டினியில் உள்ளனர்’ என்று மேற்படி ஐ.நா நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் கூட்டுப் படுகொலைகள் மற்றும் உதவிகளுக்கு இருக்கும் பெரும் தட்டுப்பாடு குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது குறிப்பிடத்தக்க அளவில் உதவிகளின் அதிகரிப்பு ஏற்படவில்லை.

ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உருசுல் வொன் டர் லெயென், உதவி விநியோகத்திற்கு மத்தியில் மக்கள் கொல்லப்படுவது தாங்க முடியாது இருப்பதாகவும் நிலைமையை மேம்படுத்த இஸ்ரேல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களும் காசாவில் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நேற்றுக் காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார வட்டாரம் தெரிவித்தது.

இரண்டு ஆண்டுகளை நெருங்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 59,106 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 142,511 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles