காட்டுக்கு சென்ற இளைஞன் யானை தாக்கி பலி

வவுனியா, செட்டிகுளம் – கிறிஸ்தவகுளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் காட்டுக்குச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்தவகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னேஸ்வரன் கேதீஸ்வரன் என்பவரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles