🛑 இந்திய வீட்டுத் திட்டத்துடன், மலையக மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.
🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் உறுதி.
🛑 மக்களுக்கு இழைத்த துரோகம் போதும், எமது நிற்பயணத்தை குழப்ப முற்பட வேண்டாம் என எம்மை விமர்சிப்போருக்கு கூறிக்கொள்கின்றோம்.
🛑 நானும் தோட்டத்தில் பிறந்தவன், லயத்தில் வாழ்ந்தவன். எங்களுக்கான விடிவை ஜனாதிபதி தோழர் அநுரகுமார திஸாநாயக்க பெற்றுக்கொடுப்பார்.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இவ்வாறு பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பண்டாரவளையில் இன்று நடைபெற்ற காணி உரித்துக்கான ஆவணம் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.










