காதலனுடன் ஓடிய பெண்ணை இழுத்துவந்து ஆணவக்கொலை செய்த குடும்பம்!

மச்சானை திருமணம் செய்ய மறுத்துவிட்டு காதலனுடன் வீட்டை வீட்டு ஓடிய பதினெட்டு வயது பெண்ணை, அவளது உறவினர் இழுந்து வந்து ஆணவக்கொலை செய்துள்ளனர். கதற கதற பாழடைந்த மண்டபம் ஒன்றினுள் கொண்டுபோய் சுட்டுக்கொல்லப்படும் – இரத்தத்தை உறையவைக்கும் இந்த – காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிரியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண் அவளது குடும்ப வட்டத்தைவிட்டு – வெளியில் சென்று – வேறொருவரை திருமணம் செய்ய முயற்சித்த காரணத்தினால், அவளது குடும்பத்தினரே இந்த கொலையை ஏற்பாடு செய்து, நடத்தி முடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பெண் படுகொலை செய்யப்பட்ட காணொலியை பகிரங்கமாக பகிர்ந்துள்ள அவளது குடும்பத்தினர், தங்களது குடும்பத்துக்கு ஏற்படவிருந்த அழுக்கு கழுவப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

(இதயம் பலவீனமானவர்கள் இக்காணொலியை பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும்)

Related Articles

Latest Articles