ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி முயற்சித்துவரும் நிலையில், அக்கட்சி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்புகள் அண்மையில் நடந்தன.
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தால் மொட்டு கட்சிக்கு உள்ளாட்சிசபைத் தேர்தலில் 30 வீதமும், மாகாண சபை தேர்தலில் 35 வீதமும், நாடாளுமன்ற தேர்தலில் 40 வீதமும் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும், உள்ளாட்சி நிறுவனங்களுக்கு 90 வீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 70 வீதமும், மாகாண சபை தேர்தலில் 70 வீதமும் தமது கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பஸில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதனால் இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வருவது இழுபறியில் உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை மொட்டு கட்சி திங்கட்கிழமை (29) அறிவிக்கவுள்ளது.