கிராம அபிவிருத்தி திட்டம் 14 முதல் மீண்டும் ஆரம்பம்!

நாட்டின் கிராமப்புற மக்களின் உண்மையான தேவைகளையும் முன்னுரிமைகளையும் அடையாளம் காணும் பொருட்டு புதிய திட்டமான ”வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு” (வெட சமக யலி கமட) செயற்திட்டத்தை 14 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய பிரதமர், இந்தத் திட்டத்தை முறையாக அடையாளம் கண்டு கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு குறித்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில், கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள 72% இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதோடு அதிகாரத்துவத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் முன்னுரிமைகளுக்கு அவசியம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாராவின் பரிந்துரைக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது நிதி அமைச்சு மற்றும் திரைச்சேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆர்ட்டிகல குறிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட இடங்கள் தொடர்பாக அரசு நிறுவனங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு காணப்பட வேண்டும் என்றார். இதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் உதவியுடன் முன்னுரிமைகள் பட்டியலைத் தயாரிக்க அமைச்சின் செயலாளர் இதன்போது ஒப்புக்கொண்டார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக நாட்டில் சுற்றுலாத்துறை பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால் நிதி அமைச்சு விரைவில் குறித்த விடயத்திற்கு உதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். குறித்த விடயம்தொடர்பாக நிதி அமைச்சு எடுத்த பல நடவடிக்கைகளை இதன்போது அமைச்சின் செயலாளர் குழுவிற்கு விளக்கினார்.

Related Articles

Latest Articles