குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: காத்தான்குடியில் பயங்கரம்!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடா பகுதியில் வீதியில் இவர் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles