குரல் அரசனின் உடல் இன்று நல்லடக்கம்

உலகப்புகழ் பாடகர் எஸ்.பி.பியின் உடல் இன்று, சென்னை அருகே, தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், நேற்று மாலை, அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு, இசை மழை வழங்கியவருக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.எஸ்.பி.பி.,யின் உடல், நேற்று இரவு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று முற்பகல் 11: மணிக்கு, பண்ணை வீட்டின் ஒரு பகுதியில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Articles

Latest Articles