குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம், மிஹிந்தலை, இலுப்புகன்னிய பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நபரின் 11 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
சிறுதி நேரத்தில் மகன் அலறும் சத்தம் கேட்டதால், தந்தை வீட்டுக்கு வெளியில் சென்று பார்த்துள்ளார்.
இதன்போது மகனைச் சுற்றிக் குளவிக் கூட்டம் இருந்துள்ள நிலையில், மகனைக் காப்பாற்றுவதற்காகத் தந்தை தனது சட்டையைக் கழற்றி மகனைச் சுற்றிக் கட்டியுள்ளார்.
ஆனால், தந்தை குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 11 வயதுடைய மகன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீட்டில் மகனும் தந்தையும் மட்டுமே வசித்து வந்துள்ளனர் எனவும், தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
