குளவிக்கொட்டு: எட்டு தொழிலாளர்கள் பாதிப்பு!

அக்கரப்பத்தனை, பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரிய மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தது குளவிக்கூடு கலைந்து கொழுந்து கொய்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது.

மன்ராசி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ‌ எட்டு பேரில் நால்வர் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியதோடு ஏனைய நான்கு பேரும் தொடர்ந்து தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் பெருமாள்

Related Articles

Latest Articles