குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!

குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் ஐவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லுணுகலை அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களை குளவி கூடு ஒன்று கலைந்து தாக்கியுள்ளன.

இதன்போது அவர்கள் கூக்குரல் இட்ட சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடிய அடாவத்தை தொழிற்சாலையில் கடமை புரிந்து கொண்டு இருந்த ஊழியர் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

லுணுகலை அடாவத்தை பகுதியைச் 40,56,56,48 வயதுடைய பெண் தொழிலாளர்களும் 29 வயதுடைய ஆண் தொழிலாளருமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான ஐவரும் லுணுகலை வைத்தியசாலையில் வாட்டு இலக்கம் 4 ,5 இல் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles