ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 அவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கட்சி தலைமையில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
கொரோனா நெருக்கடியால் சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் ஒரு சிலர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது.
இதன்போதே மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் என தெரியவருகின்றது.
சுதந்திரக்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகின்றது.