கெலிஓயாவில் மகாவலி கங்கையில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓயா, கல்கமுவ பகுதியில் நீரில்மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மொகமட் சுனஹர் என்ற 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று (03.11.2020) மாலை 4 மணியளவில் கல்கமுவ பகுதியை ஊடறுத்துச்செல்லும் மகாவலி கங்கையில் நீராடுவதற்குச்சென்றுள்ளார்.

இதன்போதே நீரில்மூழ்கி காணாமல்போயுள்ளார், இதனையடுத்து பொலிஸாரும், சுழியோடிகளும், பிரதேச வாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தினர். இன்று (4) இரண்டாவது நாளாகவும் தேடுதல் தொடர்ந்தது. எனினும், சடலம் மீட்கப்படவில்லை.

Related Articles

Latest Articles