நுவரெலியா நானுஓயா கிரிமிட்ய 476A கிராம சேவகர் பிரிவில் கிரிமிட்ய நகரை அண்மித்த பகுதியில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பன்முகடுத்தப்பட்ட நிதியில்10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார மண்டபம் இது வரையில் முழுமையாக கட்டப்படாமல் இருக்கின்றது.
இக் கட்டிடத்தை புனரமைப்பு செய்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்குமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பாஸ்கரன் மத்திய மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொள்கிறார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
” டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத் தில் கற்றலுக்கு ஏற்ற கட்டிட வசதி இல்லாமலும் மமற்றும் அடிப்படை வசதி இல்லாமலும் காணப்படுகின்ற போதிலும் 2019 ஆம் ஆண்டு கா பொ த சாதாரண தரத்தில் சுமார் 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதில் அதிகமான மாணவர்கள் உயர்தரத்தில வர்த்தகப் பிரிவில் கல்வியை தொடர விரும்புகின்றனர். எனவே இதற்கு போதுமான கட்டிட வசதியும் போதியளவு தளபாட வசதி போதிய ஆசிரியர்கள் வசதி இல்லாது காணப்படுகின்றது.
இவ்வேளையில் இப்பாடசாலைக்கு புதிய கட்டிட வசதி கிடைப்பது கடினம். ஆகையால் பிரதேசத்தில் கைவிடப்பட்ட கலாச்சார
மண்டபத்தை புனரமைப்பு செய்து நமது மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டிற்கு வசதிகளை செய்து கொடுக்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் மத்திய மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிருபர் – டி.சந்ருa