கொட்டகலைக்கு தீயணைப்பு வாகனம் – ராதா உறுதி

கொட்டகலை பகுதிக்கு விரைவில் தீயணைப்பு கருவிகள் உட்பட தீயணைப்பு வாகனமொன்றினை ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்ட போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவரோடு அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாகவும், அச்சந்தர்பத்தில் இவ்விடயத்தையும் முன்வைத்து கொட்டக்கலை பகுதிக்கு விரைவில் ஜப்பான் அரசாங்கத்தின் உதவியோடு தீயணைப்பு கருவிகளையும் தீயணைப்பு வாகனத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

தீப்பரவல் ஏனைய கடைகளுக்கு பரவாமல் தீயணைப்பை கட்டுப்படுத்த விரைந்து உதவிய அப்பகுதி இளைஞர்களுக்கும் ஐக்கிய வர்த்தக சங்கத்திற்கும் ராதாகிருஸ்ணன் நன்றிகளையும் தெரிவித்தார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles