கொட்டகலையில் பயங்கர சம்பவம்: இருவர் பொலிஸில் சரண்!

நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் திம்புள்ள – பத்தன பொலிஸில் நேற்று மாலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் கொட்டகலை பகுதியை சேர்ந்த நபரொருவரே காயமடைந்துள்ளார். அவர் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கொட்டகலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை சட்டப்பூர்வமாக திருணம் செய்துள்ளார்.

எனினும், கொட்டகலை பகுதியை சேர்ந்த மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவை பேணி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரவித்த சட்டப்பூர்வமான மனைவிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கான பெண், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் நேற்று திம்புள்ள, பத்தன பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணையின்போது பொலிஸார் முன்னிலையில், தனது மனைவியுடன் சமரசத்துக்கு வருவதாக அந்நபர் கூறியுள்ளார்.

வெளியே வந்த பிறகு சட்டத்துக்கு புறம்பான உறவை பேணும் பெண்ணுடன் இணைந்து கொட்டகலை பகுதியில் செல்பி படம் எடுத்துள்ளார். அதனை கண்ட, குறித்த நபரின் சட்டப்பூர்வமான மனைவியின் சகோதரன், அவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். மாமனாரால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியுள்ளார்.

அதன்பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர். வெட்டு காயங்களுக்கு இலக்கான நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

பத்தன நிருபர்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles