கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று (24) பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் PCR பரிசோதனை முடிவுகள் நாளை (26) வெளிவரவுள்ளன.இந்த தகவலை கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த், கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட, கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.