பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்குவரும் நிலையில், இன்று காலை முதல் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான இரு கட்சிகளும் பரப்புரைகளில் ஈடபட்டுவருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது. இறுதி நாள் என்பதால் மழைக்கு மத்தியிலும் வீடு வீடாகச்சென்றும், பொது மண்டபங்களிலும் பரப்புரைக் கூட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.










