கொத்மலை எங்கள் கோட்டை: சேவல் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது!

 

” வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. இது என் சொந்த ஊர். அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். உங்களுக்கு எங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல் சின்னத்திற்கு வாக்களியுங்கள். ஏனென்றால் கொத்மலை பிரதேச சபையை அமைக்க போவது சேவல் சின்னம் தான்…”

இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பட, ரொட்சில்ட், தவலந்தன்ன, பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜீவன் மேலும் கூறியவை வருமாறு,

” நான் ஆளும் கட்சி அல்லது எதிர் கட்சியை குறை சொல்லி அரசியல் செய்ய விரும்பவில்லை. என்னுடைய அபிப்ராயம், அரசாங்கத்தை பொறுத்த வரையில் நுவரெலியா மாவட்டத்திற்கு 2025 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் 92 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் நாங்கள் கடந்த வருடம் 580 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம் நுவரெலியா மாவட்டத்திற்கு. நாங்கள் ஒதுக்கிய நிதியை விட 5 மடங்கு குறைவாகவே தற்போதைய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அவ்வாறு இருக்கும் போது அமைச்சியில் இருந்து நீங்கள் எந்த விதமான வேலை திட்டங்களும் எதிர்பாக்க முடியாது. இன்று பாராளுமன்றத்தில் சிலர் கூறுகின்றார்கள் 4 ஆயிரம் வீடுகள் கட்டுவதாகவும் 5 ஆயிரம்ர வீடுகள் கட்டுவதாகவும் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள், ஆனால் வரவு செலவு திட்டத்தை பாருங்கள் வெறுமனே 379 வீடுகள் மாத்திரமே கட்ட முடியும். மலையகம் முழுவதுமாகவே. எவ்வாறு 4 ஆயிரம் அல்லது 5 ஆயிரம் வீடுகள் கட்ட முடியும்?

வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்குகள் கேட்கவில்லை. இது என் சொந்த ஊர். அந்த நம்பிக்கையில் தான் நான் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். உங்களுக்கு எங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல் சின்னத்திற்கு வாக்கழியுங்கள். ஏனென்றால் கொத்மலை பிரதேச சபையை அமைக்க போவது சேவல் சின்னம் தான்.

நாங்கள் 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது எங்களுக்கு 3 அச்சுறுத்தல் காணப்பட்டது. 1வது மறைந்த தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் மரணத்திற்கு பின்னர் அதை சரி செய்ய எங்களுக்கு சில கால அவகாசம் தேவைப்பட்டது. அரசியல் ஒரு பக்கம் தொழிட்சங்கம் ஒரு பக்கம்.
இரண்டாவது கொரோனா தொற்று நோய் அதோடு சேர்ந்து வந்தது. அடுத்ததாக பொறுளாதார சிக்கல். வேலை செய்வதற்கான சூழ்நிலை இல்லை. ஆனால் 2023 ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அப்போதும் எங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இருந்தாலும் கூட உஙகளுக்கான தேவைகள் நடந்தன.

வீடு திட்டம் அமுல் படுத்தப்பட்டது. காணி உரிமைப் பத்திரம் தொடர்பாக வேலைதிட்டம் நடைபெற்றது, இந்திய அரசாங்கம் ஊடாக 19 ஆசிரியர்களை வரவழைத்து பல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினோம், குழந்தைகளுக்கு ஏற்ற 1197 சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு இலவச காலை உணவு திட்டம் வழங்கினோம்.
குறிப்பாக இவை அனைத்தையும் ஒரு வருட காலத்தில் செய்தும் கூட வேலை செய்யவில்லை என்கிறார்கள்.

மேலும் சம்பள உயர்வும் வழங்கினோம். அவ்வாறு இருக்கையில் புதிய அரசாங்கம் வந்து 8 மாத காலம் ஆகியும் கூட வெறும் 4 சட்டங்களே அமுல்
படுத்தப்ட்டன. இதை நான் விமர்சிக்கவில்லை. மக்களுக்கு புரிய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசுகிறேன்.

கொத்மலை பிரதேச சபையை உருவாக்கியது நாங்கள் தான். ஆனால் தவிசாளரும் கிடையாது உப தவிசாளரும் கிடையாது. மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். அதனால் தான் இந்த முறை கொத்மலை பிரதேசத்தில் நாங்கள் சேவல் சின்னதில் தனித்து கேட்கின்றோம். கொத்மலை பிரதேசத்தை சேவல் சின்னம் இல்லாமல் உருவாக்க முடியாது. அப்படி இருக்கும் போது இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles