வெளிவந்துள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட – ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்கள் சிறப்பான சித்தியை பெற்றுள்ளனர்.
15 மாணர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், கணித பாட சித்தியுடன் உயர்தரம் கற்பதற்கு 12 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், கொத்மலை கல்வி வலயத்தில் குறித்த பாடசாலை 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பாடசாலை அதிபர் கே. தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களை நல்வழிப்படுத்தியவர்களுக்கு நன்றிகள்.
