கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 93 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 48 ஆண்களும், 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 50 நாட்களுக்கு பிறகு கடந்த மூன்று நாட்களாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.