‘கொரோனா’வால் வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் பலி’

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களில் 142 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர்களில் 4 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாகவும் அவர்களில் 4 ஆயிரத்து 600 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் ​பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றவர்கள் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் ​பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles