கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்துள்ள 4 நாட்களில் மாத்திரம் 23 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக நேற்று 7 பேர் பலியாகினர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, நாட்டில் கடந்த மாதத்தில் மாத்திரம் 20 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கடந்துள்ள நான்கு நாட்களிலும் நாளொன்றுக்கு 700 இற்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியது. நேற்று மாத்திரம் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
