கொரோனா வைரஸ் தொற்றால் 5 நாட்களுக்குள் நாட்டில் 664 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி ஆகஸ்ட் 05 ஆம் திகதி 111 பேரும், 09 ஆம் திகதி 118 பேரும், 10 ஆம் திகதி 124 பேரும், 11 ஆம் திகதி 156 பேரும், 12 ஆம் திகதி 155 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
