கொரோனாவில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து 298ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 5 இலட்சத்து 19 ஆயிரத்து 630 பேருக்கு இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 19 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles