‘கொரோனா’வில் இருந்து 11,031 பேர் மீண்டனர்! 4,644 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 378 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4 ஆயிரத்து 644 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles