‘கொரோனா’ – உலகளவில் 8 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி! இலங்கையில் நேற்று நால்வருக்கு தொற்று

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 84 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 67லட்சத்து  84 ஆயிரமாக ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 88 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 907  பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். 196  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் நேற்று   4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

 வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா தடுப்பு மையங்களில் கண்காணிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

Related Articles

Latest Articles