‘கொரோனா எந்தவொரு தகவலையும் அரசு மறைக்கவில்லை’ – சுகாதார அமைச்சர்

” நாட்டை முடக்கவேண்டிய அவசில்லை தற்போது இல்லை. அத்துடன் கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை. ” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொடர்பில் அரசியலை மையப்படுத்தி அரசாங்கம் முடிவுகளை எடுப்பதில்லை. மாறாக சுகாதார நிபுணர்களால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை.

நேற்று மாத்திரம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவல்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை. நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடிப்படையாகக்கொண்டே ஊரடங்கு பிறப்பிக்கப்படுகின்றது. ” – என்றார்.

Related Articles

Latest Articles