‘கொரோனா’ – தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா!

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ரஷியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கி உள்ளது. தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை ஜனாதிபதி புதின் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக ஜனாதிபதி புதின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா என்று பெருமிதம் தெரிவித்துள்ளது.

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்தது. அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Latest Articles