‘கொரோனா’ – விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஹட்டனில் முன்னெடுப்பு!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புபெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06.10.2020) ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொதுவெளிக்குவரும்போது முகக்கவசம் அணிதல், சமுகஇடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை கழுவுதல் உட்பட எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற்பவே பயணிகள் ஏற்றப்படவேண்டும் எனவும், நாளாந்தம் பஸ்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும் எனவும் அரச மற்றும் தனியார் பஸ்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஹட்டன் நகரசபையில் பொதுசுகாதார அதிகாரிகளாலேயே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles