கொள்கை இல்லாத எதிரணியுடன் கூட்டு கிடையாது: 21 ஆம் திகதி போராட்டத்துக்கு மக்கள் போராட்ட முன்னணி ஆதரவு வழங்காது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கூட்டத்துக்கு ஆதரவளிக்கப்படுமா என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகரவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில் மேற்படி கூட்டு நடவடிக்கைக்கு தமது கட்சியின் ஆதரவு இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

” நாம் கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தி வருகின்றோம். எனவே, ஏதேனும் பிரச்சினை வரும்போது அதிகாரத்துக்காக, நாடாளுமன்ற ஆசனத்துக்காக அந்த பக்கம், இந்த பக்கம் என தாவும் அரசியல் எமக்கு ஏற்புடையது அல்ல.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. மக்கள் மத்தியில் அரசாங்கம்மீது அதிருப்தி உள்ளது. அதேபோல மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிரணிகளே நாட்டில் உள்ளன. எனவே, எம்மால் எதிரணிகளுடன் இணைந்து செயற்பட முடியாது.

அந்தவகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கமாட்டோம். ஏனெனில் எமது கொள்கையும், அவர்களின் கொள்கையும் வெவ்வேறானவை.” என லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles